News August 15, 2025

ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் நிலைத்திருக்கும்: ஜனாதிபதி

image

இந்திய ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலமைப்பு உலகத்திற்கு தேவையான மாடல் என கூறியுள்ளார். மேலும், இந்திய ராணுவம் எந்த சூழலையும் சமாளிக்கும் என்பது ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபித்துள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாக அது வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். ▶ பொருள்: அறிவில்லாதவர்கள் தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

News August 15, 2025

இதை செய்யாமல், கூலி படத்தை CM பார்க்கிறார்: சீமான்

image

கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படத்தை CM ஸ்டாலின் பார்க்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் கைதான தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த சீமான் அதன்பின் பேட்டியளித்தார். அப்போது, மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்றார். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா அல்லது தனியார் பொறுப்பா எனவும் கேள்வி எழுப்பினார்.

News August 15, 2025

இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

image

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.

error: Content is protected !!