News August 15, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அவகாசம் நீட்டிப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 2ம் ஆண்டு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான இணையதளம் முன்பதிவு கால அவகாசம் வருகின்ற ஆக.20ம் தேதி இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.cmtrophy.sdat.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News March 6, 2026
விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (05.03.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.
News March 5, 2026
மேம்பாலம் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

மரக்காணம் ஒன்றியம் அன்னப்புத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் அன்னப்புத்தூர் – ஓமந்தூர் செல்லும் சாலையில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இன்று (மார்ச்.05) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News March 5, 2026
விழுப்புரம் அருகே பெண் தற்கொலை!

அனந்தபுரம் அருகே உள்ள பனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி ஜெயா(30). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த ஜெயா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெயாவின் தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


