News August 14, 2025
மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஆட்சியர் அலுவலகம்

இந்திய நாடு முழுவதும் நாளை (15.08.2025) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஜொலித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு முதல் விடியற்காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் (Sub-Division) அனைத்துப் போலீஸ் அதிகாரிகளும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு நேரத்தில் ஏதேனும் அவசர உதவி அல்லது பாதுகாப்புத் தேவைப்பட்டால், பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.
News March 10, 2026
திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று மார்ச் 10 வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், ஆன்லைனில் வாகனம் வாங்கும் முன்,
வாகனத்தை நேரில் பார்த்து அதன் ஆவணங்களை சரிபார்த்த பிறகே பணம் செலுத்துங்கள். இல்லையெனில் மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது எனவும் வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா எனவும் தெரிந்து கொள்ளுங்கள் என தரப்பட்டுள்ளது.
News March 10, 2026
திருப்பத்தூர்: வங்கியில் வரிசையில் நிற்க வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


