News August 14, 2025

ராணிப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டம், (ஆகஸ்ட் 15) அன்று நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 615 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.

Similar News

News August 14, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஒளி அலங்காரம்

image

ராணிப்பேட்டை, 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பல்வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்யப்பட்ட இந்த ஒளி அலங்காரம், இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு சிறப்புத் தந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த அலங்கார ஏற்பாடு, மாவட்டம் முழுவதும் விழா சூழலை ஏற்படுத்தி, மக்களில் கொண்டாட்ட உணர்வை பரவச் செய்தது.

News August 14, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100 என்றும் தெரிவித்தனர்.

News August 14, 2025

ராணிப்பேட்டை: திமுக நிர்வாகி மறைவிற்கு அமைச்சர் அஞ்சலி

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் திமுக மேற்கு ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான பாலன் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!