News August 14, 2025

மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மெட்ரோ ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை நடைபெறும். பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

நாளை விருது வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

image

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார்.

News August 14, 2025

சென்னை டு திருச்சிக்கு சிறப்பு ரயில்

image

3 நாள்கள் தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு முன்பதிவு இல்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. இதே ரயில் வரும் 17-ம் தேதி இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்து தாம்பரம் வரை இயங்கும். (SHARE)

News August 14, 2025

சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 டிக்கெட்..! அதிர்ச்சியில் மக்கள்

image

3 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையும், சென்னை- கோவை, சென்னை- சேலம், சென்னை- திருச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சொந்த ஊர் செல்லும் மக்கள் கவலை அடைந்தள்ளனர். அதிக கட்டணம் வசூலித்தால் 1800-424-6151 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!