News August 14, 2025
ஈரோடு: உங்கள் கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

ஈரோடு மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <
Similar News
News August 14, 2025
ஈரோடு அருகே அரசு பள்ளியில் எம்.பி ஆய்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சிவகிரி – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற தொகுதி நிதியின் மூலம் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நிலத்தடி நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு எம்பி., கே.இ.பிரகாஷ் பங்கேற்று பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பார்த்து ஆய்வு செய்தார்.
News August 14, 2025
ஈரோடு : பவானி – சித்தோடு சாலை சீரமைப்பு

பவானி-சித்தோடு நெடுஞ்சாலையில் பஸ்கள்,கனரக லாரிகள்,நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதோடு, ஜல்லிகள் பரவலாக கிடந்தது. பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், நேற்று முன்தினம் குண்டும் குழியுமான இடங்களில், கான்கிரீட் போட்டு சாலையை அதிகாரிகள் சீரமைத்தனர்.
News August 14, 2025
ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா

ஈரோடு: ஆனைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.