News August 14, 2025

நாமக்கல்: மாதம் ரூ.15,000.. வங்கியில் பயிற்சி!

image

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News August 14, 2025

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் பொது விருந்து

image

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில் மதியம் 12.30 மணி அளவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 14, 2025

ஆயுள் பலம் தரும் நித்ய சுமங்கலி மாரியம்மன்!

image

நாமக்கல்: ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

News August 14, 2025

நாமக்கல்: விவசாயிக்கு ரூ.2.5 லட்சம் பரிசு!

image

வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்புப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2,50,000, இரண்டாம் பரிசாக ரூ.1,50,000, மூன்றாம் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படும் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!