News April 7, 2024
NIA அதிகாரிகள் மீது வழக்கு

மே.வங்கத்தில் NIA அதிகாரிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் 2 TMC தொண்டர்களை சனிக்கிழமை NIA கைது செய்தது. அப்போது NIA வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து NIA புகார் அளித்த நிலையில், கைதான நபர்களின் குடும்பத்தினரும் புகார் அளித்தனர். அதன்பேரில், பெண்ணை துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2026
விஜய்க்கு மட்டும் ஓட்டு போடாதீங்க: SP வேலுமணி

கோவை தெற்கில் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு மான பிரச்னை என SP வேலுமணி பேசியுள்ளார். கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து பேசிய அவர், திமுக எதிர்ப்பு ஓட்டுகளை குறிவைத்து, விஜய் திமுக எதிர்ப்பு அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டினார். மற்ற எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும் திமுகவுக்கு சாதகமாக மாறும் என்றவர், குறிப்பாக விஜய்க்கு ஓட்டுப்போடாதீர்கள் என கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
சுங்க கட்டண உயர்வு மக்களை சுரண்டும் செயல்: காங்கிரஸ்

<<19520486>>சுங்க கட்டணம் <<>>உயர்வால் அத்தியாவசியப் பொருள்களில் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயல் எனவும் சாடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயரும் சுங்கக் கட்டணத்தால், மாநிலப் போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் எனவும் கூறியுள்ளது.
News March 31, 2026
கடன் தள்ளுபடி.. சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி செய்தி

இன்றைய திருவாரூர் தேர்தல் பிரசாரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி (அ) வட்டி தள்ளுபடி தொடர்பான வாக்குறுதியை ஸ்டாலின் வெளியிடுவார் என நம்புகிறோம் என்று CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்த்த நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் வெளியிடவில்லை. அதேநேரம், கூட்டுறவு வங்கி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.


