News April 7, 2024

மோடியின் வெற்றிக்காக கைவிரலை வெட்டிய நபர்

image

மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற வேண்டி கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது விரலை வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அருண் வர்னேகர் என்ற அந்த நபர், காளிதேவி முன்பு வேண்டிக் கொண்டு இடதுகையில் உள்ள ஆள்காட்டி விரலை வெட்டியுள்ளார். அந்த ரத்தத்தில் வீட்டு சுவரில், மோடியை காளிதேவி காக்க வேண்டுமெனவும் எழுதி வைத்துள்ளார். ஏற்கெனவே அவர் மோடிக்கு தனது வீட்டில் கோயில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 5, 2025

சொந்தக் காலில் இந்தியா தனித்து நிற்கிறது: FM

image

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

News November 5, 2025

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: விஷ்ணு விஷால்

image

தமிழ் சினிமா ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதற்கு ஹீரோக்களின் சம்பளமும் ஒரு காரணம் என்றும், அதை குறைத்தால் படத்தின் மேக்கிங்கிற்கு கூடுதல் செலவு செய்யலாம் எனவும் அவர் கூறினார். தனது கடைசி 3 படங்கள் லாபம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டார். பல டாப் ஹீரோக்கள் படத்தின் பட்ஜெட்டில் 50-60% சம்பளமாக பெறுகின்றனர் என்பது கோலிவுட் வட்டார தகவல்.

News November 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 510 ▶குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ▶பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

error: Content is protected !!