News August 14, 2025

செங்கல்பட்டில் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இனி இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

Similar News

News August 16, 2025

செங்கல்பட்டு இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்!

News August 16, 2025

செங்கல்பட்டு: கிருத்திகைக்கு போக வேண்டிய முருகன் கோயில்கள்!

image

ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பல புராதன முருகன் கோயில்களைக் கொண்டுள்ளது. அதில்,
▶️திருப்போரூர் கந்தசாமி கோயில்,
▶️செம்மலை முருகன் கோயில்,
▶️ஆனூர் கந்தசுவாமி கோயில்
▶️சாளுவன்குப்பம் முருகன் கோயில்
▶️செய்யூர் முருகன் கோயில் குறிப்பிடத்தக்கவை. செல்வ செழிப்பு & மகிழ்ச்சி பொங்க ஆடிக் கிருத்திகையில் இங்கு சென்று முருகனை வழிபடுங்க. ஷேர்!

News August 16, 2025

செங்கல்பட்டு: கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

image

செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் அருகே ஆத்தூர் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் நேற்று (ஆகஸ்ட் 15) மதியம் வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகர் கோயில் திருவிழாவிற்கு, ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!