News August 14, 2025
மக்களின் தியாகத்தை போற்றுவோம்: PM மோடி

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து 1947 ஆக.14-ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக பலர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றி இந்நாள் பிரிவினை கொடுமையின் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், மக்களின் போராட்டங்கள், தியாகங்களை நினைவுகூர்ந்து, தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவோம் என PM மோடி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
தூய்மை பணியாளர்கள் விவகாரம்.. CMக்கு நெருக்கடி

தலைநகர் சென்னையில் 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருவது ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
News August 14, 2025
உங்க ஊருக்கு அர்த்தம் தெரியுமா?

உங்க ஊர் என்ன? என்று கேட்டால், நாம் அருகிலுள்ள நகரம் (அ) மாவட்டத்தின் பெயரையே கூறுவோம். முகவரி எழுதும்போது மட்டுமே கிராமத்தின் பெயரை நினைவில்கொள்வோம். ஆனால், நாம் பிறந்த கிராமமோ (அ) டவுனோ தான் நமது அடையாளம். அவ்வாறான ஊர் பெயர்களில் உள்ள புரம், பட்டி, குளம், பாளையம் உள்ளிட்டவற்றின் அர்த்தங்கள் என்னவென்பதை மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். உங்கள் ஊர் என்னவென்பதை கமெண்ட் செய்யுங்கள்.
News August 14, 2025
65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை வெளியிட SC ஆணை

பிஹாரில் SIR மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட ECI-க்கு SC உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 3 நாள்களுக்குள் டிஜிட்டல் வடிவில் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விவரங்களை வெளியிட முடியாது என ECI கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.