News August 14, 2025
மதுரையில் அரசு சான்றிதழுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

மதுரை புதுார் தொழிற்பேட்டையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆக. 16, 17ல் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயிற்சி, ஆக. 23, 24ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜி.எஸ்.டி., பிராக்டிஷனர் பயிற்சிகள் நடக்கிறது. 10ம் வகுப்பு படித்த, 18 வயது நிரம்பிய இருபாலர்கள் சேரலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அறிய 8695646417 அழைக்கலாம். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க .
Similar News
News August 16, 2025
மதுரை மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.செப்.28 ல் குரூப் 2 பணியிடங்கள் உட்பட 645 காலியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். பணம் கொடுத்து சேருவதற்கு பதில் அரசின் இலவச வகுப்பில் சேர்ந்து பயனடைங்க மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 16, 2025
காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு.

மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடவுச்சொல் பாதுகாப்பு
தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குங்கள். இரண்டு அடுக்கு பாதுகாப்பினை பயன்படுத்தவும். கடவுச்சொற்களை யாருடனும், ஒருபோதும் பகிர வேண்டாம். கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றவும். தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த வேண்டாம். குறைந்தது 8 எழுத்துகள் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
News August 15, 2025
மதுரை: 20 ரூபாய்க்காக பள்ளி மாணவி தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளியில் (ஆகஸ்ட் 15) இன்று கொடியேற்ற நிகழ்வுக்கு செல்ல 20 ரூபாய்க்கு கேட்ட மாணவிக்கு தாய் பணம் தர மறுத்ததால், மாணவி ராஜராஜேஸ்வரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 20 ரூபாய்க்காக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்கானூரணி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.