News August 14, 2025

ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தரும் அம்பிகை!

image

தஞ்சாவூர், திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்பிகை ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தருகிறார். தன்னை நினைத்து தவம் இருந்த அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன், ஜோதி ரூபமாக காட்சி தந்தார். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஜோதி ரூபத்தில் இருந்த ஈசன் மீதும் வைத்து, அம்பிகை ஈசனைத் தழுவினார். இக்கோயில் வழிபட்டால், மனக்கசப்பால் பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது.

Similar News

News August 16, 2025

இல.கணேசன் உயிரிழப்புக்கு காரணமென்ன?

image

பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து ஆளுநருமான <<17417636>>இல.கணேசன் உடல்நலக்குறைவு<<>> காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவர் உயிரிழப்பு குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இல.கணேசன் மூளைக்குள் ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், தொடர் சிகிச்சையளித்தும், ரத்தக்கசிவு தொடர்ந்ததால் அவர் உயிரிழந்தார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 16, 2025

ஆகஸ்ட் 16: வரலாற்றில் இன்று

image

*1946 – கொல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 3 நாட்களில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
*1968 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதை பிரெஞ்சு அரசு அதிகாரபூர்வமாக ஏற்ற தினம்.
*2006 – இயற்கை வேளாண் தந்தை மசனோபு ஃபுக்குவோக்கா மறைந்தநாள்.
*2018 – முன்னாள் PM வாஜ்பாயின் மறைந்தநாள்.
*1954 – டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் பிறந்தநாள்.

News August 16, 2025

ராமதாஸுடன் புகைப்படம் எடுத்த அன்புமணி

image

பாமக தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே கடந்த சில தினங்களாகவே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தனது குடும்பத்தோடு தைலாபுரத்துக்கு நேற்று மாலை அன்புமணி சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த கேக் வெட்டும் நிகழ்விலும் அன்புமணி பங்கேற்றார். அப்போது ராமதாஸும் உடனிருந்தார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!