News April 7, 2024
ஆசிரியரை சரமாரியாக வெட்டி நகை பறிப்பு

மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 31, 2026
மதுரை: வேலை கிடைக்காததால் கொத்தனார் தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு நிரந்தரமாக வேலை கிடைக்காமல் மதுரைக்கு திரும்பி வந்தார். இங்கும் சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த முத்துக்குமார் இன்று
வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
மேலூர் அருகே 4 வழிச்சாலை கார் விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் திருச்சி மதுரை நான்கு வழி சாலையில் பைக்கில் நேற்று சென்ற போது, வெள்ளமலைப்பட்டி சந்திப்பு அருகே, நாகர்கோயிலை சேர்ந்த ரெம்மிங்டன் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
மதுரை: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<


