News August 14, 2025

வேலூர் மாவட்ட SP எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆக-13) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று (ஆக.15) இரவு முதல் இன்று(ஆக.16) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்காள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 15, 2025

ஆம்புலன்ஸ் சேவைக்கு நற்சான்றிதழ்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 79 வது சுதந்திர விழா மாவட்ட கலெக்டர் சிவ சௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா முன்னிலையில் கொண்டாடப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சிறப்பாக பணி புரிந்ததின் காரணத்திற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட்டது

News August 15, 2025

வேலூர் மாவட்டம் முழுவதும் 90 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்கும் மாவட்டம் முழுவதும் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் இன்று (ஆகஸ்ட் 15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!