News August 13, 2025

புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில் புனித ஜார்ஜ் கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 5அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

சென்னை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 17ரயில்கள் ரத்து

image

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் பொன்னேரி- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், வரும் 16, 18ம் தேதிகளில் மேம்பாட்டு பணி நடப்பதால் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9:40, பகல் 12:40, சென்ட்ரல்- சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 1:05 என மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

ரூ.5,000 கோடியில் சென்னையில் வாட்டர் மெட்ரோ

image

மெட்ரோ சேவையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நேப்பியர் பாலம்- கோவளம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து, தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோவை இயக்குவதற்கு மொத்தச் செலவு சுமார் 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்து.

error: Content is protected !!