News August 13, 2025
11,796 வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 11,796 ரேஷன் அட்டை தாரர்களுக்கு 168 வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் 16,940 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அடங்கிய 45,052 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொருட்கள் நேரடி விநியோகம் செய்யப்பட உள்ளது.
Similar News
News August 16, 2025
விழுப்புரத்தில் ஆடி கிருத்திகைக்கு இதை செய்யுங்க!

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விழுப்புரத்தில் அமைந்துள்ள சம்புவராயநல்லூர் பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை சுயம்புவாக தோன்றியது என நம்பப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க!
News August 16, 2025
திருட முயன்ற பைக் திருடனைப் பிடித்த பொதுமக்கள்

விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை இருவர் திருட முயன்றனர். அதிகாலை 5:00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பொதுமக்கள் ரூபனை என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரில் ஒருவரான சந்தோஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். விழுப்புரம் போலீசார் ரூபனைக் கைது செய்ததுடன், தப்பியோடிய சந்தோஷையும் தேடி வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு காரணமாக ஒரு திருடன் பிடிபட்டுள்ளான்.
News August 16, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.