News August 13, 2025
கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது

கோவை மாநகர் பகுதியில் தொடர் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ராம் நகரில் உள்ள பிரகாஷ் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குணசீலன் (51). உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி (34). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 14, 2025
கோவையில் இலவசமாக AI படிக்க வேண்டுமா?

செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.விண்ணபிக்க<
News August 14, 2025
கோவையில் கொட்ட போகும் மழை

மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
News August 14, 2025
கோவை: இலவச பட்டா பெற இதை செய்யுங்கள்!

கோவை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.