News August 13, 2025
நீலகிரியில் நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. நாளை (ஆகஸ்ட் 14) நடைபெறும் முகாம்களின் விவரங்கள்: குன்னூர் நகராட்சி – பாரதியார் மண்டபம், ஊட்டி நகராட்சி – ஸ்ரீனிவாசா மண்டபம், சோலூர் பகுதி – உரட்டி சமுதாயக் கூடம், கெங்கரை பகுதி – கெங்கரை சமுதாயக் கூடம், குந்தா பகுதி – கூர்மையாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.
Similar News
News August 14, 2025
நீலகிரி: சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு பணி!

குன்னுார் காட்டேரி பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக, 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நேற்று துவங்கியது. பூங்காவில் பூஜைகள் போடப்பட்டு, நீலகிரி தோட்டக்கலை துணை இயக்குனர் நவநீதா, நடவு பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், குன்னுார் தோட்ட கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ், மற்றும் பண்ணை பணியாளர்கள் பங்கேற்றனர்.
News August 14, 2025
நீலகிரி: இ-நாம் திட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு!

நீலகிரி மக்களே விவசாய விளை பொருள்களை விற்க ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் விவசாய விளை பொருள்களை கொண்டு செல்வதற்கு செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலரை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
இ-நாம்’ செயலி வாயிலாக விற்பனை செய்ய அழைப்பு!

குன்னுார், ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்’ வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம்.