News August 13, 2025

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு மானியம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சொா்ணவாரி நெல் மற்றும் காரீப்பருவ நிலக்கடலை, கம்பு பயிா்களுக்கு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று
திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

தி.மலை மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

தி.மலை மாவட்ட மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. மற்றவர்களுக்கு தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

தி.மலையில் மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆக.14) செங்கம், கலசப்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!