News April 7, 2024
வேலூரில் லட்சக்கணக்கில் பறிமுதல்

மக்களவை தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று (ஏப்ரல் 6) வரை தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 71 லட்சத்து 87, 150 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், இன்று வேலூர் தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் IUCAW, SJHR மற்றும் ACTU போலீசாரின் சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமுதாயத்தில் அனைவரும் சமம் என்பது குறித்தும், வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம், மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
News September 17, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் காட்பாடி கே..வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, மேல்பட்டி, அணைக்கட்டு மற்றும் முக்கிய இடங்களில் பொது மக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (செப்டம்பர்- 17) இரவு வந்த பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 17, 2025
வேலூரில் இப்படி ஒரு இடமா…!

வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஒன்று வேலூர் கோட்டை. இக்கோட்டையானது கி.பி.1526-கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டை தென்னிந்தியாவின் இராணுவக் கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடம் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. உங்க ஊர் பெருமைகளை அறிய ஷேர் பண்ணுங்க.