News August 13, 2025

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்த நிர்வாகிகள்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் முன்பும், அரசு மருத்துவமனை முன்பும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு சாதகமற்ற ஆபத்தான சூழ்லில் உள்ளது. இதனை உடனே சரி செய்யக்கோரி உத்தமபாளையம் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நகர தலைவர் சகுபர் சாதிக் தலைமையில் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.

Similar News

News November 14, 2025

தேனி: ஜூஸ் வியாபரி தற்கொலையில் மர்மம்

image

தஞ்சாவூர், பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் கம்பத்தில் 4 வருடங்களாக ஜுஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமகாத நிலையில் கடையின் அருகே வேலை செய்யும் பொம்முதாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் வழக்கு (நவ.13) பதிந்து விசாரணை.

News November 14, 2025

தேனி: நகராட்சி பணியாளரை கத்தியால் குத்தியவர் கைது

image

பெரியகுளம் தென்கரை பகுதியில் நேற்று (நவ.13) பெரியகுளம் நகராட்சி சார்பில் சாலை பணி நடைபெற்று உள்ளது. அங்கு வந்த காமராஜ் (27) என்பவர் பணியில் இருந்தவர்களிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனை நகராட்சி தற்காலிக பணியாளர் தினேஷ் தட்டி கேட்ட நிலையில் அதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தினேஷை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

News November 14, 2025

தேனியில் மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

தேனி மதுவிலக்கு போலீசார் அக்டோபர் மாதம் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான விக்னேஷ்குமார் (21), முத்துப்பாண்டி (19) ஆகிய இருவர். உப்புக்கோட்டையில் நவீன்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதான அவரது நண்பர் குணா (22) ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!