News April 7, 2024
விஜயகாந்திற்காக மக்கள் வருத்தப்படுகின்றனர்

விஜயகாந்தை முதல்வராக்காமல் விட்டுவிட்டோமே என மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்று பிரேமலதா உருக்கமாக கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது லட்சியத்தை நிச்சயம் செயல்படுத்துவேன். தேமுதிகவை நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்பேன்” என்றார்.
Similar News
News February 5, 2026
நெருங்கும் தேர்தல் தேதி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, CEC ஞானேஷ்குமார் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பிப்.12, 13-ல் தமிழகம் வருகின்றனர். இதன்படி, சென்னையில் 2 நாள்கள் முகாமிட்டு தமிழக CEO அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ECI அறிவித்துள்ளது.
News February 5, 2026
தவெகவில் இருந்து முக்கியப்புள்ளி விலகலா?

விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் ஜான் ஆரோக்கியசாமி. இந்நிலையில், ஆதவ்வின் என்ட்ரிக்கு பிறகு தான் புறக்கணிக்கப்படுவதாக எண்ணும் ஜான் விஜய்யுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். கட்சியின் 3-ம் ஆண்டுவிழாவில் விஜய் கொடுத்த விருந்திலும் ஜான் பங்கேற்கவில்லையாம். மேலும் விஜய்யின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள ஜான், விரைவில் தவெகவில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளாராம்.
News February 5, 2026
ஏன் மூன்று முறை ஆரத்தி காட்டுகிறோம் என தெரியுமா?

பொதுவாக கடவுளை வழிபடும் போது, 3 முறை கற்பூர ஆரத்தி காட்டுவோம். அது, கடவுளின் 3 நிலைகளை குறிக்கிறது. அதாவது, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே நேரத்தில் இதற்கு வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லது 3 காலங்களான இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றையும் குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது. SHARE IT.


