News August 13, 2025

புதுவையில் இளம்பெண் தற்கொலை

image

கிருமாம்பாக்கம், பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபராதி (24). இவருக்கும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றுவதால் சொந்த ஊருக்கு வர தாமதம் ஏற்பட்டு, திருமணம் தடைப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமாபாரதி தற்கொலை செய்துகொண்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

புதுவையுடன் இந்த பகுதி இணைந்தது எப்படி?

image

காரைக்கால், மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். பிரெஞ்ச் கவர்னராக இருந்த தூப்ளே, இதனைச் சுற்றியுள்ள ஊர்களை விலைக்கு வாங்கி விரிவாக்கம் செய்தார். இதற்கு முக்கிய காரணம் பிரஞ்ச் அரசில் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார். இவருடைய புத்திக்கூர்மையால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.

News August 13, 2025

புதுச்சேரி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

image

புதுச்சேரியில் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம். ▶️ புதுச்சேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை – 0413-2274552, ▶️ காரைக்கால் பொது மருத்துவமனை – 04368-222450, ▶️ மருத்துவ அலுவலர் 04368-222593, ▶️ பொது மருத்துவமனை – மகப்பேறு-04368-223917. அவசர உதவிக்கு மட்டும் அழைத்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க

News August 13, 2025

புதுவையில் சோலார் விழிப்புணர்வு முகாம்

image

புதுவை தவளக்குப்பம் சுபமங்கள ஹாலில் நாளை (ஆக.14) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இத்திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்ஸ்க்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்ஸ் ரூ.60 ஆயிரமும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு 9489080373, 9489080374 தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!