News August 13, 2025
ராணிப்பேட்டையில் 4,406 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ராணிப்பேட்டையில் 4,406 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 அழைக்கலாம்.
News August 13, 2025
ராணிப்பேட்டை: குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பாலியல் குற்றம் புரிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தணிகாசலம் (45) என்பவருக்கு 20 வருடங்கள் கடும் காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினார்.
News August 13, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர்: கழிவுநீர் கால்வாய் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, மேல்விஷாரம் நகராட்சியில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்தார். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, தனியான கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகள் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.