News August 13, 2025
திருட்டு வழக்கில் வடமாநில இளைஞர்கள் கைது

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பட்டமுத்து. இவர் தனது மனைவியுடன் சென்னை செல்வதற்காக கடந்த 10-ம் தேதி ஆம்னி பேருந்தில் வந்தபோது அழகாபுரியில் உள்ள ஹோட்டலில் இரவு உணவுக்காக பேருந்து நின்றுள்ளது. உணவு சாப்பிட்டு விட்டு, வந்து பார்த்த போது கைப்பையில் இருந்த தங்க நகை திருடு போனது.நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த அப்பாஸ்கான்,அக்ரம்கான், மோலா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
Similar News
News August 13, 2025
முட்டை எடை குறைவாக இருந்தால் புகார் அளிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவுடன் முட்டை சாப்பிடுகின்றனர். சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் குறைந்தபட்சம் 45கி இருக்க வேண்டும். ஆனால் சில முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அளவு குறைவாக இருந்தால் அந்தந்த ஒன்றிய பிடிஓ.,க்களிடம் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 13, 2025
விருதுநகர்: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. விருதுநகர் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
News August 13, 2025
சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன்

அருப்புக்கோட்டை வடுகர் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடுகர் கோட்டை முத்துமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.