News August 12, 2025
BREAKING: மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீசார் கைது செய்துள்ளனர். மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் சிக்கிய இவரை கடந்த மே மாதம் திமுகவில் இருந்து நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்திருந்தார். அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17-வதாக பொன்வசந்த் சிக்கியுள்ளார். இவர் அமைச்சர் PTR-க்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
Similar News
News August 13, 2025
தோனிக்கு பதில் யார்? பட்டியலில் 5 வீரர்கள்

2026 IPL சீசனில் தோனி விளையாடுவாரா (அ) பாதியில் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் அரங்கில் ஒலித்துக் கொண்டே உள்ளது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் CSK-வின் அடுத்த வி.கீ., பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற பட்டியலும் தயாராகி வருகிறதாம். இதில் சஞ்சு சாம்சன் (RR), உர்வில் படேல் (CSK), ரஹ்மானுல்லா குர்பாஸ் (KKR), இஷான் கிஷன் (SRH) , நாராயண் ஜெகதீசன் (KKR) ஆகியோர் உள்ளனர்.
News August 13, 2025
ரஜினி ஒரு அபூர்வ ராகம்! குவியும் வாழ்த்துக்கள்

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தனது வாழ்த்தை தெரிவித்த வைரமுத்து, ரஜினி ஒரு அபூர்வ ராகம் என தெரிவித்துள்ளார். அதேபோல் DCM உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன், செல்வப்பெருந்தகை, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
News August 13, 2025
சில்லறை பணவீக்கம் கடும் சரிவு.. ஜாக்கிரதையாக இருங்க

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைந்துள்ளது. அரசின் CPI(consumer price index) அறிக்கையின்படி ஜூன் மாதத்தில் 2.1% ஆக இருந்த பணவீக்கம், ஜூலையில் 1.55% ஆக குறைந்தது. 2017 ஜூன் மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 2% கீழ் குறைவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக பணவீக்கம் குறைந்தால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதோடு வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.