News August 12, 2025
தர்மபுரி மாணவர்கள் கவனத்திற்கு!

தருமபுரி, காரிமங்கலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 இலவச பேருந்து பாஸ், புத்தகங்கள், பாடக் கருவிகள், சீருடைகள், ஷூ,மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும். குறைந்த இடங்களே உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
தர்மபுரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் இயங்க தடை

தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் அனைத்தும் 14.8.2025 இரவு 10.00 மணி முதல் 16.8.2025 காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
News August 14, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 13, 2025
வேலைவாய்ப்பு கண்காட்சியினை பார்வையிட்ட ஆட்சியர்

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர்ரெ.சதீஸ்,இன்று (13.08.2028) பார்வையிட்டார்கள். உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.