News August 12, 2025
விருதுநகரில் கஞ்சா விற்ற 266 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் 20205-ம் ஆண்டில் கஞ்சா விற்றவர்கள் மீது 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 266 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.6,89,100 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் குட்கா விற்றதாக 1158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1230 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.24,11,297 மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.30,65,970 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
முட்டை எடை குறைவாக இருந்தால் புகார் அளிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவுடன் முட்டை சாப்பிடுகின்றனர். சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் குறைந்தபட்சம் 45கி இருக்க வேண்டும். ஆனால் சில முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அளவு குறைவாக இருந்தால் அந்தந்த ஒன்றிய பிடிஓ.,க்களிடம் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 13, 2025
விருதுநகர்: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. விருதுநகர் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
News August 13, 2025
சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன்

அருப்புக்கோட்டை வடுகர் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடுகர் கோட்டை முத்துமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.