News August 12, 2025
நாமக்கல்லில் ஆக.14-ல் வேலைவாய்ப்பு முகாம்!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04286 222260 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE செய்து உதவுங்க!
Similar News
News August 13, 2025
நாமக்கல் முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில், இதற்கிடையே நேற்று(ஆக.12) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News August 13, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலை உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று(ஆக.12) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.92 ஆக அதிகரித்து உள்ளது. அதன்படி, முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News August 13, 2025
நாமக்கல்: கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞர்கள் கைது

நாமக்கல்: மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அஜய் ராவுத் (35 ), திலீப் குமாா் சேத்தி (28) ஆகிய இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். நீதிபதி ரங்கராஜன், பிடிபட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.