News August 12, 2025
ராணிப்பேட்டை: இளைஞர் கொலை; திமுக கவுன்சிலர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினி, அவரது கணவர் சுதாகர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கையை வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த அவினேஷ் என்பவரை காவல் நிலைய வாசலில் ஓட ஓட வெட்டிக் கொன்ற வழக்கில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News August 13, 2025
ராணிப்பேட்டை: 10th போதும் அரசு வேலை!

ராணிப்பேட்டை மாக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <
News August 13, 2025
பள்ளி வளாகத்தில் மது பிரியர்களின் அட்டகாசம்

ஆற்காட்டில் அமைந்துள்ள சரஸ்வதி தனகோட்டி ஆரம்பப்பள்ளி வாசலிலேயே சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவதும், அந்த மது பாட்டில்களை பள்ளி வளாக வாசலில் வீசி செல்கின்றனர். மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இதை துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
News August 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினமும் விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாதசாரிகள் கவனமாக இருக்கவும், சீட் பெல்ட்டை பயன்படுத்தவும், போக்குவரத்து விதிகள்& விதிமுறைகளைப் பின்பற்றவும், தூக்கம் வந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், ஹெல்மெட் அணியுங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் போன்றவற்றை விளக்கும் வகையில் பதிவிட்டுள்ளது. இதை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!