News August 12, 2025
இமாலய சாதனை படைத்த INDvsENG 5-வது டெஸ்ட்!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்டின் 5-வது நாள் போட்டியை, சுமார் 1.3 கோடி மக்கள் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்துள்ளனர். டிஜிட்டல் பிளாட்பார்மில் டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்த அதிகபட்ச Viewership இதுதான். 5-வது நாளில், வெறும் 36 ரன்களை எடுக்க முடியாமல், இங்கிலாந்து அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. நீங்க போட்டியை எதில் பாத்தீங்க?
Similar News
News August 13, 2025
இந்தியாவை எச்சரித்த பாக்., PM

பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நீரில் ஒரு துளியைக் கூட இந்தியாவால் பறிக்க முடியாது என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை நிறுத்தி வைத்து மிரட்டினால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. பாக்., Ex அமைச்சர், ராணுவ தளபதி மிரட்டலை அடுத்து பிரதமரும் எச்சரித்துள்ளார்.
News August 13, 2025
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஆனால், புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு சற்று வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
₹100 கோடி வசூல்.. சம்பளத்தை உயர்த்திய VJS..

விஜய்சேதுபதி – நித்யாமேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படம் உலகம் முழுவதும் இதுவரை ₹93 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ₹100 கோடி வசூலை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை அடுத்து விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் தங்களது சம்பளத்தை உயர்த்திவிட்டனராம். இதனால் அவர்கள் இருவரும் இணையும் அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் தயக்கம் காட்டுகிறாராம்.