News August 12, 2025
பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.
Similar News
News August 13, 2025
தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

ChatGPT-ல் ஒரு கேள்விக் கேட்டால், நொடியில் பதில் சொல்கிறது. சிம்பிளா இருந்தாலும் இந்த AI-யின் பின்னணி சிக்கலானது. தினம் கோடிக்கணக்கான கேள்விகளை பிராசஸ் செய்ய, தகவல்கள் சேமிக்க மாபெரும் டேட்டா மையங்கள் தேவை. இவற்றுக்கு அபரிமிதமான மின்சாரம் தேவை. இந்த (நீர்)மின்சாரம் தயாரிக்க தண்ணீர் தேவை. அவ்வகையில், உங்களின் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல 10 ml தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே.
News August 13, 2025
முதல் மனைவியுடன் மாதம்பட்டி.. குழப்பமா இருக்கே?

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில் 2-வது திருமணம் செய்தது சர்ச்சையானது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே அவர் 2-வது திருமணம் செய்திருப்பதாகவும், முதல் மனைவி கோர்ட்டை நாடவுள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில், தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதனால், 2-வது மனைவியுடன் சண்டையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னவா இருக்கும்?
News August 13, 2025
பாகிஸ்தான் தான் எங்க கூட்டாளி… USA-வின் மெசேஜ்

பாகிஸ்தானில் இயங்கும் BLA அமைப்பு, அதன் ஆயுதப் பிரிவான மஜீத் பிரிகேட் இரண்டையும் பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்கா இப்போது அறிவித்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் இதை அறிவிப்பது, பாகிஸ்தானுக்கு ஆதரவை தெரிவிப்பது மட்டுமல்ல, தனது கூட்டாளி பாக்., தான் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதற்காகவும் தான் என்கின்றனர் சர்வதேச நோக்கர்கள்.