News August 12, 2025
ஆசிரியர் தகுதித்தேர்வு தேதியை மாற்ற EPS வலியுறுத்தல்

கல்லறைத் திருநாளன்று <<17372693>>ஆசிரியர் தகுதித் தேர்வு <<>>நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரை போலவே மக்கள் உணர்வுகளை அறியாமல் அலட்சியமாக திமுக அரசு செயல்படுவதாக சாடியுள்ளார். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 12, 2025
உயிருக்கு போராடும் நடிகருக்கு உதவிய தனுஷ்

துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ், ‘நண்பா மீண்டும் வந்துவிடுவாய்’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.
News August 12, 2025
TN அரசின் இலவச லேப்டாப்: 2 நிறுவனங்கள் தேர்வு

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்திற்கு Dell மற்றும் Acer நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன. 8 GB RAM, 256 ROM, 15.6 இன்ச் திரை, புளூடூத் வசதிகள் கொண்ட லேப்டாப்பிற்கு Dell நிறுவனம் ₹40,828 நிர்ணயித்துள்ளது. அதேபோல், 14 இன்ச் டிஸ்பிளே கொண்ட லேப்டாப்பிற்கு Acer நிறுவனம் ₹23,385 நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏற்றுள்ள எல்காட் நிறுவனம் இம்மாதத்தில் ஒர்க் ஆர்டரை வழங்க உள்ளதாம்.
News August 12, 2025
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்? நேரு விளக்கம்

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என தெரிவித்த அவர் கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.