News August 12, 2025
வங்கிப் பணிக்கான எழுத்துத் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

எஸ்பிஐ கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் மற்றும் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2/2 ஏ ஆகிய எழுத்து தேர்வு வாயிலான காலி பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை தயார் செய்யும் விதம் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
தாயுமானவர் திட்டம் தொடங்கி வைத்த ஆட்சியர்

மயிலாடுதுறை, தரங்கம்பாடி வட்டம் கீழையூர் கிராமத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசு அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
News August 12, 2025
மயிலாடுதுறை: IT Company வேலைக்கு இலவச பயிற்சி!

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் இங்கே <
News August 12, 2025
மயிலாடுதுறையில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் நலனை காக்கும் பொருட்டு அவர்கள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை 29 வது வார்டு பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு 29 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரஜினி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று குடிமை பொருட்களை வழங்கினார்.