News August 12, 2025
சேலம் அருகே பள்ளி வாகனம் விபத்து!

சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூர் அடுத்த தண்ணித்தொட்டி பிரிவு சாலை அருகே, இன்று காலை அரசு விரைவு பேருந்தும் தனியார் பள்ளி வாகனமும் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனம் சற்று சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக பள்ளி குழந்தைகள் உட்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News August 12, 2025
நாய் கடியில் சேலம் முதலிடம்! உடனே CALL பண்ணுங்க!

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News August 12, 2025
சேலம்: நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனியில் அமைந்துள்ள கிழக்கு கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.13) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
சேலம்: நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனியில் அமைந்துள்ள கிழக்கு கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.13) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.