News August 12, 2025

ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளி கைது

image

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்த் (28). பூக்கடை நடத்தி வரும் இவரை கடந்த 25.1.2025 அன்று புதுச்சேரி பாகூர் பங்களா தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் பாலாஜி (26) என்பவர் கொலை செய்தார். பின்னர் கடலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வந்து தலைமறைவானார். இதையடுத்து ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த பாலாஜியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 10, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

image

குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூரை சேர்ந்தவர் அருள் குமார்(24). இவரது தந்தை இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அருள்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நெய்வேலி போலீசார் அருள்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2025

கடலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!