News August 12, 2025
வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.
Similar News
News August 12, 2025
தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

உலகிலேயே அதிக நீரை உறிஞ்சுவது இந்த டேட்டா செண்டர்கள் தான். AI-ஐ ட்ரெயின் செய்வதற்கும், பதில்களை கொடுக்கவைப்பதற்கும், தரவுகளை சேமிப்பதற்கும் டேட்டா செண்டர்கள் இன்றியமையாதது. உதாரணத்திற்கு, 100 மெகாவாட் கொண்ட டேட்டா செண்டர் ஒரு நாளுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறதாம். எனவே AI-யிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு 10 மி.லி. தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே..
News August 12, 2025
யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 146 MP-க்கள் கையெழுட்திட்டு வழங்கிய தீர்மானத்தின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமாம். தீ விபத்தின் போது வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.
News August 12, 2025
நாட்டில் இவ்வளவு ₹500 கள்ள நோட்டுகளா?

2024 – 25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், ₹500 கள்ள நோட்டுகள் 1.17 லட்சம், 200 கள்ள நோட்டுகள் ₹32 ஆயிரம், 100 நோட்டுகள் ₹51 ஆயிரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளின் தரத்தை மேம்படுத்த RBI-க்கு வலியுறுத்தி இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியே இன்னும் எவ்வளவு இருக்குதோ?