News August 12, 2025
பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் மூடல்

தமிழகத்தில் சுமார் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால், அப்பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 17 பள்ளிகளும், சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை, மதுரை, ஈரோட்டில் 10 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கோவை, திருப்பூர், விருதுநகர், தி.மலை, குமரி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 12, 2025
OPS விவகாரத்தில் நயினார் மழுப்பலான பதில்

தோல்வி பயத்தில் உள்ள திமுக புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய அவர், கல்வியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வது ஆய்வறிக்கை மூலம் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு OPS மீண்டும் வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுபற்றி பின்னர் பேசலாம் என மழுப்பலாக பதிலளித்தார்.
News August 12, 2025
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. பலி எண்ணிக்கை உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கோயிலுக்கு சென்று திரும்பிய <<17376208>>வேன் <<>>பள்ளத்தில் விழுந்த விபத்தில், பலியான பெண்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. 20- 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேனில் இருந்து மீட்கப்பட்ட 27 பேர் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. CM தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து, பலியானோர் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
News August 12, 2025
கோலிவுட்டுக்கு புது ரூட் போட்டு கொடுத்த ரஜினி!

ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என தமிழ் சினிமாவை உலக நாடுகளில் விரிவுப்படுத்திய பெருமை ரஜினியையே சாரும். தற்போது ‘கூலி’ படத்தின் மூலம் புதிய மார்க்கெட் ஒன்றையும் அவர் திறந்துள்ளார். ஜெர்மனியில் ‘கூலி’ படத்துக்கு தற்போது வரை 10,000 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஜெர்மனியில் தமிழ் படங்களுக்கு புதிய மார்க்கெட் ஓபன் ஆகியுள்ளது.