News August 12, 2025
செங்கல்பட்டின் பெயர்க்காரணம் தெரியுமா?

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்ததால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது தற்போது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது இப்பகுதி மக்களால் செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 12, 2025
செங்கல்பட்டில் ஆசிரியர் வேலை… இன்றே கடைசி!

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.<
News August 12, 2025
செங்கல்பட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியிலோ (அ) இந்த <
News August 12, 2025
ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொறுப்பு ஏற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றி வந்த நாராயண சர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பி.ஸ்ரீதேவி இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றார். பின்னர், அவர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதேவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.