News August 12, 2025

போலி சாமியார் போக்சோவில் கைது

image

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.

Similar News

News August 12, 2025

கூலி பீவர்.. ₹4,500க்கு விற்பனையாகும் FDFS டிக்கெட்!

image

வரும் 14-ம் தேதி வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள், மாநிலம் கடந்து சென்று கள்ள சந்தையில் பல ஆயிரங்களை செலவு செய்து டிக்கெட் வாங்கியுள்ளனர். சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் கள்ளச் சந்தையில் ₹4,500-க்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீங்க டிக்கெட் வாங்கியாச்சா?

News August 12, 2025

Asia Cup.. பெஸ்ட் பிளேயிங் XI எது?

image

செப்டம்பரில் தொடங்கும் Asia Cup-ல் யார் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அபிஷேக் சர்மா, கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜுரெல், அக்சர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 19 அல்லது 20-ம் தேதி அணி அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-யை கமெண்ட் பண்ணுங்க?

News August 12, 2025

CM பொறுப்புடன் பேச வேண்டும்: நயினார் கண்டனம்

image

வாக்கு மோசடியில் ECI ஈடுபட்டதாக <<17367499>>ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு <<>>நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ECI-யின் மீது குற்றம்சாட்டுவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என தெரிவித்த அவர், CM பொறுப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தினார். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ECI கேட்ட விளக்கத்துக்கு ராகுல் பதில் அளிக்காமல், அதை நியாயப்படுத்த முயல்வது தவறு எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!