News August 12, 2025

ஈரோட்டில் டாஸ்மாக் கடை இயங்காது – ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட்.15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மதுபான, மதுக்கூடங்கள், மதுபான விடுதிகள், பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அன்று முழுவதும் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எனவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

ஈரோட்டில் இலவச CNC Operator பயிற்சி!

image

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச CNC Operator – Turning பயிற்சி வழங்கப்படவுள்ளது. 63 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், CNC machines,தொடர்பான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க<> இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 11, 2025

ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

image

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 33.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்

News August 11, 2025

ஈரோடு: அரசு சார்பில் இலவச ஆன்மிகப் பயணம்

image

ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற ஆக.15 ஆம் தேதியன்று பக்தர்கள் ஆன்மிகப் பயணம் செல்வதற்கு ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் சூரம்பட்டிவலசு, பெரியார் நகர், ஜவான் கட்டிடம், இரண்டாவது தளம் என்ற முகவரியில் நேரில் சென்று பெறலாம். ஈரோடு மக்களே அனைவருக்கும் பகிருங்கள் யாருக்காவது பயன்படும்! SHAREIT

error: Content is protected !!