News August 12, 2025

மயங்கி விழுந்து நபர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

image

திருச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முகுந்தன் (57). இவர் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில், வடலூர்- நெய்வேலி சாலையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்த முகுந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனனர்.

Similar News

News August 12, 2025

கடலூர் மாவட்டத்தில் ஆணவக் கொலை ?

image

விருத்தாசலம் அரசக்குழியை சேர்ந்த முருகன்-ஜெயா தம்பதியர் மகன் ஜெயசூரியா (19). இவர், கடந்த மே மாதம் 18-ந்தேதி மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது பெற்றோர்கள் கூறுகையில், ‘என் மகன் வேறு சாதி பெண்ணை காதலித்ததால், அவனை ஆணவக் கொலை செய்துள்ளனர். என் மகன் இறப்பில் சந்தேகம் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.

News August 12, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

கடலூரில் பிறந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

image

கடலூரில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யாரென தெரியுமா?
✅வள்ளலார்
✅எழுத்தாளர் ஜெயகாந்தன்
✅திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்
✅திக தலைவர் கி.வீரமணி
✅நடிகர் புகழ்
நம்ம கடலூருக்கு பெருமை சேர்த்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்

error: Content is protected !!