News August 11, 2025

IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

4 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண் குமார், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டண்டாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணப்பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுஷ் திவாரி டேன்ஜெட்கோவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

Similar News

News August 12, 2025

இந்தியா கூட்டணியினருக்கு இரவு விருந்தளித்த கார்கே

image

இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரவு விருந்தளித்தார். இதில், சரத் பவார், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகளும், கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.

News August 12, 2025

ஆகஸ்ட் 12: வரலாற்றில் இன்று

image

*1948 – கர்நாடகா முதல்வர் சித்தராமையா பிறந்தநாள்.
*1979 – தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நாள்.
*1990 – அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.

News August 12, 2025

போலி சாமியார் போக்சோவில் கைது

image

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.

error: Content is protected !!