News August 11, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் இல்லை

image

காவேரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள், கூட்டுக்குடி நீர் திட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய 2 நாட்கள் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

image

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று முத்துப்பேட்டை பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்திமலர் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் நாகநாதன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் தமிழரசி, ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ மாணவியர் கல்வி செயல்பாடு, விடுதி வசதி, சுகாதார வசதி குறித்து விவாதிக்கப்பட்டது.

News August 11, 2025

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் எம்பி கைது

image

தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்பி நவாஸ்கனி, பாஜகவின் அரசு ஜனநாயக படுகொலையை, வாக்கு திருட்டை அம்பலப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

News August 11, 2025

மீனவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில் மீன்பிடிக்க சென்ற 4 பேர் கடந்த 6ஆம் தேதி கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று மீனவர்களின் வழக்கு 2ஆவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவுவிட்டார்.

error: Content is protected !!