News August 11, 2025
நாகை: டிகிரி போதும்! ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <
Similar News
News August 12, 2025
நாகையில் 354 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 354 கிலோ கஞ்சா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, இதுதொடர்பாக 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News August 11, 2025
நாகை போலீஸ் சூப்ரண்ட் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் கஞ்சா கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டு மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கஞ்சா, மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் எச்சரித்துள்ளார்.
News August 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கி ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,500 மதிப்பீல் காதொலிக் கருவி மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,900 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.12,400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் இன்று வழங்கினார்.