News August 11, 2025
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மாற்றம்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கவண்டம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து இலகு ரக மற்றும் கனரக வாகனங்களும் காந்திபுரம், அவினாசி ரோடு செல்ல, நல்லாம்பாளையம் வழியாக காந்திபுரம் வழியாக செல்லலாம்.
Similar News
News August 12, 2025
கோவை: வனப்பகுதியில் முதியவர் எலும்பு கூடாக மீட்பு

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடப்பட்டி பிரிவு வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக காரமடை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்ததில், இறந்தவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மாயமான வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்த முருகன்(70) என்பதும், மன உளைச்சலால் மருந்து குடித்து தற்கொலை செய்ததும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
News August 12, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
கோவை: 8வது படித்திருந்தால் அரசு வேலை!

கோவை மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!