News August 11, 2025
நாமக்கல்: 8வது போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT!
Similar News
News November 7, 2025
நாமக்கல்லில் விபத்து.. ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுதா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News November 7, 2025
நாமக்கல்: இளம் பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்!

நாமக்கல்: புதுச்சத்திரம், சர்க்கார் நாட்டாமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம் (56). இவரது மகள் ஸ்ரீவர்சினி (22) மாற்றுத்திறனாளி மற்றும் மன வளர்ச்சி குன்றியவர். இவர் வீட்டில் வீல் சேரில்தான் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் (60), ஸ்ரீவர்சினிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜரத்தினம் புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடாஜலத்தை தேடி வருகின்றனர்.
News November 7, 2025
கொல்லிமலையில் அறிமுக கலை வகுப்புகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் விரிவாக்க மையம் கொல்லிமலை குழந்தைகளுக்கான அறிமுக கலை பயிற்சி வகுப்பு, கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கத்தில் நவம்பர் மாதம் முழுவதும், அனைத்து சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


