News August 11, 2025
கிருஷ்ணகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 11, 2025
கிருஷ்ணகிரி காவல்துறை முக்கிய அறிவிப்பு

இணையதளத்தில் கவர்ச்சிகரமான பொருட்களின் விளம்பரங்களை நம்பி கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளமா? என உறுதி செய்த பின் பொருட்களை வாங்கவும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பண மோசடி புகார்களுக்கு உடனே 1930 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News August 11, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் தலைமையில் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.08.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கோபு, தனித்துணை ஆட்சியர் தனஞ்செயன் உடனிருந்தனர். மக்களின் பல்வேறு குறைகள் கேட்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டது.
News August 11, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.11) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.