News August 11, 2025
மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கிய சபாநாயகர்

புதுச்சேரி, மணவெளியில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால் அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தவளக்குப்பம் பள்ளியில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூபாய் 10,000 வழங்கினார்.
Similar News
News August 11, 2025
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களுக்கு சீல் வைத்த கலால் துறை

புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.
News August 11, 2025
ரெஸ்டோ பார் கொலை; சிபிஐ விசாரணை வேண்டும்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி ரெஸ்டோ பார்மாணவர் கொலை வழக்கில் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையென்றால்
காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கன்டன ஆர்ப்பாட்டம் இந்திரா காந்தி சிலை அருகே இன்று நடைபெற்றது. இதில், கடவுள் ராமரை இழிவுபடுத்தி வைரமுத்து பேசியதாக கூறி நடைபெற்ற ஆர்பாட்டத்தில், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில், ஏராளமான பாஜகவின் கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வைரமுத்துவின் உருவப்படத்தை கிழித்து எறிந்தனர்.